Friday, September 6, 2019

இராமன் மிதிலைக்கு வருகிறான். சாலையில் நடந்து வருகிறான். மேலே மாளிகையில் இருந்து சீதை காண்கிறாள். முதல் தடவை இருவரும் பார்த்துக் கொள்கிறார்கள்.

பார்த்த அந்த கணத்திலேயே காதல் பிறக்கிறது. இருவர் இதயமும் இடம் மாறுகிறது.

இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் என்பான் கவிச் சக்கரவர்த்தி கம்பன்.

பருகிய நோக்கு எனும்
    பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர் தம்
    உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும்
    வாள் கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு
    இதயம் எய்தினார்.


இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்இனிஇந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் இன்றிமற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்மழை வண்ணத்து அண்ணலேஉன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்கால் வண்ணம் இங்குக் கண்டேன்!--  4

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்

No comments:

Post a Comment