Monday, September 2, 2019

இனிக்கும் தமிழ்

நன்னெறி - வாழ்க்கை என்னும் அதிசயம் 


வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒரு மிகப் பெரிய அதிசயம்.

மூச்சுக் காற்று வந்து போய்க் கொண்டிருக்கிறதே..

பிறந்தது முதல் ஓய்வின்றி இதயம் துடித்துக் கொண்டிருக்கின்றதே..

தன்னிச்சையாகத் தானே இவை செயல்படுகின்றன 


ஒவ்வொரு வினாடியும் இந்த உடலில் உயிர் உலவுவது மிகப் பெரிய அதிசயம் இல்லையா?


ஒன்பது வாயில்கள் இந்த உடலில். ஒன்றுக்கும் பூட்டு கிடையாது. 

காயமே இது பொய்.இது வெறும் காற்றடைத்தப் பை.ஒரு பலூன் போல..
இந்த ஓட்டை பலூனில் காற்று நிற்பது அதிசயமா , காற்று இறங்கிப் போவது அதிசயமா ?

பாடல்

வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில் 
பொருந்துதல் தானே புதுமை - தீருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு.






பொருள்

வருந்தும் உயிர் = வருத்தப் படும் உயிர்

ஒன்பான் வாயில் உடம்பில் = ஒன்பது வழிகளை கொண்ட உடலில்

பொருந்துதல் தானே புதுமை = பொருந்தி இருப்பதுதானே புதுமை

தீருந்திழாய் = அழகான பெண்ணே

சீத நீர் = குளிர்ந்த நீர்

பொள்ளல் = ஓட்டை உள்ள 

சிறுகுடத்து = சின்ன குடத்தில்

நில்லாது = நிற்காமல்

வீதலோ  = ஒழுகிப் போவதோ

நிற்றல் = ஒழுகாமல் நிற்பதோ

வியப்பு = ஆச்சரியம் ?

No comments:

Post a Comment