Thursday, August 29, 2019

கொஞ்சி விளையாடும் தமிழ்


திருவிளையாடற் புராணம்- மரமும், மங்கையும்
--------------------------------------------------
பெண்கள் ஊடல் கொள்ளும் போது தங்கள் ஆபரணங்களை அணிந்து கொள்வது இல்லை. அவற்றைத் துறந்து வெறுமையாக இருப்பார்கள். வெயில் காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து வெறுமையாக இருப்பதைப் போல.

காதல் கொண்டு கூடும்போது உள்ளம் மகிழ்ந்து உடல் பூரித்து குழைந்து இருப்பவர்களைப் போல, மழைக் காலத்தில் மரங்கள் தளிர் விட்டு மப்பும் மந்தாரமுமாக இருக்கும்.

அன்புக் காதலர்கள் அவர்களை விட்டு நீங்கினால் கண்ணில் நீர் வர உடல் எல்லாம் ஒரு வித பசலை படரும் அது மரங்களில் பசலை படர்வது போலவும்

ஒரு பெண் தன் காமத்தை, காதலை வாய் விட்டுச் சொன்னால் அது ஊர் பூராவும் வதந்தியாகப் பரவி விடும் அது மரங்களில் மலர்கள் கொத்து கொத்தாக பூத்து கிடப்பதைப் போல இருக்கிறது என்கிறார் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தில்.....

பாடல்

ஊடினார் போல வெம்பி யிலையுதிர்ந் துயிரன் னாரைக்
கூடினார் போல வெங்குங் குழைவரத் தழைத்து நீங்கி
வாடினார் போலக் கண்ணீர் வாரமெய் பசந்து மையல்
நீடினா ரலர்போற் பூத்து நெருங்கின மரங்க ளெல்லாம்.