Sunday, September 1, 2019

இனிக்கும் தமிழ்

எல்லா பெண்களும் அரசிகள்தான்.

அவர்கள் எந்த நாட்டுக்கு அரசிகள் ? அவர்களின் படைகள் என்ன, அவர்களின் வெண் கொற்ற குடை எது ?

நள வெண்பா பாடிய புகழேந்திப் புலவர் கூறுகிறார்....

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு வித குணங்களே நான்கு விதமான படைகள் (இரதப் படை, யானைப் படை, குதிரைப்படை , காலாட்படை) , ஐந்து புலன்களும் அவர்களை வழி நடத்தும் அமைச்சர்களாக, இரண்டு கண்களும் வில்  படையும்,வேல் படியுமாக, அவர்களின் அழகிய முகமே வெண்கொற்றக் குடியாக பெண்மை அரசு செய்கிறது....


பாடல்

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு.

No comments:

Post a Comment