Monday, February 23, 2015

இனிக்கும் தமிழ் -9



சிலேடைப் புலவர் காளமேகத்திடம் 'த' என்ற எழுத்து மட்டும் வருமாறு பாடல் ஒன்றைப் பாடச் சொல்ல அவர் பாடிய பாடல்



தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?)

அடடா....பாடல் முழுதுமே இனிக்கிறதே

No comments:

Post a Comment