Sunday, February 22, 2015

இனிக்கும் தமிழ்-8



சாதாரணமாக காதலன் தன் மனம் கவர்ந்தவளைக் காணும் இடம் இன்று பெரும்பாலும் கடற்கரைகளே..
கடல் இல்லாத இடங்களில்..பூங்காக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்கள். அவர்களுக்குத் தனிமை தேவைப்பட்டாலும்..இது போன்ற இடங்களுக்கு வருவோர் பெரும்பாலும்..தான், தன் துணை,தன் குடும்பம் தவிர வேறு பக்கங்களில் பார்வையை ஓட்டுவதில்லை.
காதலன் தன் காதலி எங்கு வருவாள்..அவளை எங்கு சந்தித்தால் உரையாடலாம் என்று தெரியாது அவளது நெருங்கிய தோழியிடம் கேட்கிறான்..'உன் நண்பியை எங்கு சந்திக்கலாம்..அவள் எங்கிருப்பாள்?' என்றெல்லாம்.
அந்தக் காதலியின் தோழி சற்று குறும்புக்காரியாய் இருப்பாள் போலிருக்கிறது..'நேரடியாக பதில் சொல்லாமல்..அவனை சற்று சுற்றியடிக்கக நினைக்கிறாள்..ஆகவே அவனுக்கான பதிலை ஒரு விடுகதையைப் போல சொல்கிறாள்.

ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுபவள் பெரும்பே தையே

ஊருக்கு அருகே பொய்கை உள்ளது.சிறு காட்டாறு அப்பொய்கைக்குத் தூரத்தில் இல்லை (அருகே உள்ளது).அவ்வாற்றில் தன் இரையத் தேடும் நாரைகளைத் தவிர வேறு யாரும் வருவதில்லை (தனிமைப் பிரதேசம்)நாங்கள் எங்கள் கூந்தலுக்கு செங்கழுநீர் பூக்கள் பறிக்க அங்கு செல்வோம்.பெரும் பேதமைக் கொண்ட அவள் அங்கும் வருவாள்..என்கிறாள் தோழி.

அதாவது காதலி அந்த இடத்திலும். என உம் போட்டாலும்..அவள் அங்குதான் இவருக்காக காத்திருப்பாள் என பொருள் பட சொல்கிறாள்.ஆற்றங்கரைக்குச் சென்றால் அவளைக் காணலாம் என்ற பதிலை நேரடையாகச் சொல்லவில்லை.

இப்பாடல் குறுந்தொகையில் தோழிகூற்று (மருதம்)..113ஆம் பாடல்..ஆசிரியர்-மாதீர்த்தனார்)

No comments:

Post a Comment