Wednesday, February 18, 2015

இனிக்கும் தமிழ் - 4



சங்கத் தமிழ்ப் பாடல்கள்...ஒவ்வொன்றும் ரசிக்கத்தக்கவை...இலக்கியச் சுவை மிக்கவை.அவற்றில் ஒன்று கம்பர் எழுதியது.இந்த கம்பர் ராமாயணம் பாடியவரா எனத் தெரியவில்லை.

பாடலை ரசியுங்கள்..

பொன்னி வளநாட்டில் மாத்தத்தன் என்கிற அழகன். அவனது அழகில் மயங்கி, அவன் மீது காதலுற்ற காரணத்தால் மங்கையர்தம் மேனி மெலிய, அவர்கள் அணிந்திருந்த வளையல் கழன்றனவாம். இதை, (சொற்பொருட் பின்வருநிலை அணி எனும் இலக்கணப்படி) "வளை" எனும் வார்த்தையை வைத்துக்கொண்டு விளையாடுகிறார் கவிஞர்.

"இருந்தவளை போனவளை என்னை அவளைரார்
 பொருந்த வளைபறித்துப் போனான் - பெருந்தவளை
 பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
 மாத்தத்தன் வீதியில் வந்து."


சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக்கொள்வேன் வளையிட்டு என்னவளை காதல் சொன்னவளை என்கிற கண்ணதாசன் பாடல் ஞாபகம் வருகிறதா?

1 comment:

  1. உங்கள் மூலம் நானும் தமிழை ரசிக்கிறேன்

    ReplyDelete