Sunday, June 14, 2015

இனிக்கும் தமிழ் - 41 காளமேகம் சிலேடைப் பாடல்கள்-11




பனைமரமும், விலைமகளும்


கட்டித் தழுவுதலாற் கால்சேர வேறுதலால்
எட்டின்பன் னாடை யிழுத்தலால் - முட்டப்போய்
ஆசைவாய்க் கள்ளை அருந்துதலா லப்பனையும்
வேசையென லாமேவி ரைந்து. 

பனைமரம் – பனைமரத்தில் ஏறுவோர் அதனைக் கட்டித் தழுவிக்கொண்டும் காலைச் சேர்த்து வைத்துக்கொண்டும் ஏறுவர். எட்டி அதன் பன்னாடையை இழுத்து எறிவர். முட்டிக்கொண்டு தன் ஆசை வாயால் அதன் கள்ளை அருந்துவர்.

விலைமகள் - விலைமகளை  (அவளிடம் வருவோர்) கட்டித் தழுவுவர். காலைச் சேர்த்து வைத்துக்கொண்டு அவள்மீது ஏறுவர். எட்டிப் பிடித்து அவளது பன்னாடையை (மடித்துக் கட்டிய ஆடையை) இழுத்து அவிழ்ப்பர். முட்டிக்கொண்டு அவளது ஆசைகாட்டும் வாயிலுள்ள எச்சில் கள்ளை அருந்துவர்.

No comments:

Post a Comment