Friday, June 5, 2015

இனிக்கும் தமிழ் -39 காளமேகம் சிலேடைப் பாடல்கள்- 9



நாயும் தேங்காயும்

ஓடுமிருக்கும் அதனுள்வாய் வெளுத்தி ருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயுமெனச் செப்பு .


நாயானது ஓடும். இருக்கும்.. அதன் உள்வாய் வெள்ளையாக இருக்கும். நம்மை நாடி வரும். வாலைக் குழைத்து வருவதற்கு வெட்கப்படாது.

தேங்காயில் ஓடும் இருக்கும். தேங்காயின் உள்பகுதி வெள்ளையாக இருக்கும். தென்னை மரத்தில் நாம் விரும்பும் தென்னங்குலை தள்ளும். தென்னைமரமாக இருக்கும்போது வளைந்து கொடுக்காது.

1 comment: