Thursday, June 4, 2015

இனிக்கும் தமிழ்- 38 காளமேகம் சிலேடைப் பாடல்கள் - 8



சந்திரனும் மலையும்

நிலவாய் விளங்குதலால் நீள்வான் படிந்து
சிலபோது உலாவுதலாற் சென்று – தலைமேல்
உதித்து வரலால் உயர்மா மலையை
மதிக்கு நிகராக வழுத்து


சந்திரன் நிலாவாக விளங்குகிறது. நீண்ட வானத்தில் படிந்து சில நேரங்களில் உலாவுகிறது. தலைக்கு மேல் தோன்றி வருகிறது.

மலையானது நிலத்தின் வாய் போலப் பிளவு அடுக்ககுகளோடு காடப்படுகிறது. நீண்ட வானத்தில் படிந்திருப்பது போலத் தோன்றுகிறது. சில வேளைகளில் நாம் மலைமேல் உலாவி வருகிறோம். நம் மேல் உயரமாகத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment