Monday, June 8, 2015

இனிக்கும் தமிழ் - 40 காளமேகம் சிலேடைப் பாடல்-10




மீனும் பேனும்

மன்னீரிலே பிறக்கும மற்றலையி லேமேயும்
பின்னீச்சிற் குத்தும் பெருமையால் - சொன்னேன்கேள்
தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில்
மீனும்பே னுஞ்சரி யாமே.


மீனானது நிலைபெற்ற நீரிலே பிறக்கும். மற்று அதன் நீரலையிலே மேயும். திரும்பும் பின்-நீச்சலில் குத்தும்.

பேனானது நிலைத்திருக்கும் ஈரிலே பிறக்கும். மன்னித் தலையிலே மேயும். பின்னி எடுத்து ஈச்சு என்னும் ஈர்கொல்லியில் குத்தப்படும். இவை இரண்டிற்கும் பெருமை.

No comments:

Post a Comment