Monday, May 4, 2015

இனிக்கும் தமிழ் -29



நம் பெரியவர்கள் நல்லொழுக்கத்துடன் இரு என அறிவுரை சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

திருவள்ளுவரும் ஒழுக்கம் உடைமை என்ற பெயரில் ஒரு அதிகாரமே வைத்துள்ளார்.அதில் ஒரு குறளில், உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும் கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள் என்கிறார்.

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்

ஆமாம்...இந்த ஒழுக்கம் என்பது என்ன? அதிலும் வகைகள் இருக்கிறதா..நல்ல ஒழுக்கத்துடன் திகழ தேவையாவவை என்ன...இது பற்றி ஆசாரக் கோவை சொல்வதென்ன...பார்ப்போம்


நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோ
      டின்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ
      டொப்புர வாற்ற வறிதல் அறிவுடைமை
      நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்
      சொல்லிய ஆசார வித்து

 தனக்குப் பிறர் செய்த நன்றியை மறவாமையும்,  பொறுமையும்,  இன்சொல்லும்,  எல்லா உயிர்க்கும்  துன்பந்தருபவற்றை  செய்யாதிருத்தலும், கல்வியும், பிறருக்கு உதவிடம் இனிய வழக்கமும், மிக,  அறிதலும், அறிவு உடைமையும்,  நல்ல இயல்புள்ளவர்களுடன், நட்புச் செய்தலும்,  என்ற இவ்வெட்டு வகையும்,  அறிஞர்களாற் சொல்லப்பட்ட,  ஒழுக்கங்கட்குக் காரணங்களாகும்.

No comments:

Post a Comment