விவேக சிந்தாமணி - தேவை இல்லாதது
நாம் எல்லோரும் ஒரு கால கட்டத்தில் தேவை இல்லாதவர்களாகப் போய் விடுகிறோம்.
நம்மிடம் இருந்து ஏதாவது பலன் கிடைக்கும் வரை தான் உலகம் நம்மை வேண்டும், விரும்பும்.அதற்குப் பின் கறிவேப்பிலையாய்த் தூக்கிப் போட்டு விடும்.
தேவைப்படும் வரும் வரை உன்னைச் சுற்றுவார்கள்.உன் தேவை முடிந்ததும் உன்னையே தூக்கி எறிவார்கள்.
என்றெல்லாம் கூறி இப்போதே நம்மை தயார் படுத்துகிறது விவேக சிந்தாமணி.
பிள்ளைகள் பெரியவர்கள் ஆகி விட்டால் பெற்றோரின் சொல்லை கேட்க .மாட்டார்கள். வயதானால் மனைவி கணவனை மதிக்க மாட்டாள். எல்லா வித்தையும் கற்ற பின்னால் சீடன் ஆசிரியனை மதிக்க மாட்டான். நோய் குணமாகி விட்டால் நோயாளி மருத்துவனை மதிக்க மாட்டான்.
இது உலக இயற்கை. உலகம் சுயநலமானது. நம்மால் உபயோகம் இருக்கும் வரைதான் உலகம் நம்மை மதிக்கும்.
எந்தத் துறையில் நீங்கள் இருந்தாலும் சரி
பாடல்
பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான்
கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார்
(பண்டிதர்- மருத்துவர்)
No comments:
Post a Comment