Tuesday, July 28, 2015

இனிக்கும் தமிழ் - 46 காளமேகம் சிலேடைப் பாடல்கள் - 16



கீரைப் பாத்தியும், குதிரையும்

கட்டி யடிக்கையாங் கான்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய்
மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்
ஏறப் பரியா குமே.


 கீரை விதை தெளிக்கும்போது பாத்தியிலுள்ள மண்ணாலகட்டிகள் அடித்து உடைக்கப்படும். வாய்க்காலில் மடை மாறித் தண்ணீர் பாயும். பாயும் மடையின் கரை வெட்டி மறிக்கப்படும். மேன்மை அதற்கு உண்டு. பாத்தியின் எல்லையில் நீர் முட்டியபின் மடை திருப்பிவிடப்படும்.

குதிரையானது வண்டியில் கட்டி அடிக்கப்படும். முன்னங்கால் பின்னங்கால் என்று கால் மாறிப் பாயும். காலைத் தரையில் வெட்டிக் காட்டித் தன் மேன்மையைக் குதிரை விளக்கும். தடை வரும்போது திரும்பி ஓடும்.

No comments:

Post a Comment