Sunday, March 1, 2015

இனிக்கும் தமிழ்-13



சாதாரணமாக புலவர்கள் பொன் வேண்டி அரசனைப் புகழ்ந்து பாடுவர்.

அப்படி, நமது 23ஆம் புலிகேசி போன்ற ஒரு அரசன் மீது புலவர் ஒருவர் பொய்யாகப் புகழ் பாட..அரசனோ கோபமுற்றானாம்.

புலவர் பாடிய பாடல்-

சீருலா விய காமதேனுவே! தாருவே

சிந்தா மணிக்கு நிகரே

செப்புவசனத்து அரிச் சந்திரனே!

பாடலைக் கேட்ட மன்னன் கோபமடைந்து சொல்லியவை -

ஆரை நீ மாடுகல் மரம் என்றுரைத்தனை?

அலால் அரிச்சந்திரன் என்றே

அடாதசொற் கூறினை? யார்க்கடிமை யாயினேன்

யார் கையில் பெண்டு விற்றேன்?

தீருமோ இந்த வசை?

பிறகு..புலவர் ஏன் அங்கு நிற்கிறார்.பிடித்தார் ஓட்டம்.

No comments:

Post a Comment